search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேரளாவில் மழை பாதிப்பு"

    கேரளாவில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சபரிமலை பம்பை நதி பாலம் உள்ளிட்ட பக்தர்கள் செல்லும் வழித்தடத்தை ரூ.25½ கோடி செலவில் சீரமைக்க இருப்பதாக தேவசம்போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். #sabarimala
    திருவனந்தபுரம்:


    கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டது. இதில் சபரிமலையில் உள்ள பம்பை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதன்காரணமாக பம்பையில் இருந்து சபரிமலை சுவாமி அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் இருமுடி கட்டு சுமந்து செல்லும் சாலைகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. பல இடங்களில் சாலைகள் இருந்த தடமே தெரியாமல் போய்விட்டது.

    பம்பை நதியில் கட்டப்பட்டு இருந்த பாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது பம்பையில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புரட்டாசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடையும் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்களும் கோவிலுக்கு சென்று வருகிறார்கள்.


    பெரும் சிரமத்திற்கு இடையேதான் பக்தர்கள் சுவாமி அய்யப்பனை தரிசிக்கும் நிலை உள்ளது. வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி மண்டல பூஜை தொடங்க உள்ளது. அப்போது நாடுமுழுவதும் இருந்து சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் திரண்டு வருவார்கள் என்பதால் அதற்குள் சபரிமலையில் சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டியது உள்ளது.

    இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் சபரிமலைக்கு சென்று அங்கு நடைபெறும் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தற்போது சபரிமலையில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அனைத்து பணிகளையும் முழுமையாக மண்டல பூஜைக்கு முன்பு முடிக்க திட்டமிட்டுள்ளோம். அய்யப்ப பக்தர்கள் தங்கும் மண்டபங்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இவற்றை சீரமைக்க ரூ.25½ கோடி தேவைப்படும். இதற்கான திட்டமதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைந்து பணிகள் முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sabarimala
    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமிரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaFloodRelief #UAE
    புதுடெல்லி:

    கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி வழங்க இருப்பதாக அம்மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் தெரிவித்து இருந்தார். அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ‌ஷயத் அல் நயான், பிரதமர் நரேந்திர மோடியுடன் டெலிபோனில் பேசியபோது, இத்தகவலை தெரிவித்தார் என்றார்.

    ஆனால் வெளிநாடுகளின் நிதி உதவியை ஏற்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இதற்கு கேரளாவில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்தநிலையில் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமிரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை என மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா

    இதுகுறித்து இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அல்பன்னா கூறும்போது, ‘‘கேரளாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மறு சீரமைப்பு பணிக்கு தேவையான உதவிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான குறிப்பிட்ட அளவு நிதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை’’ என்றார்.

    முன்னதாக கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ஐக்கிய அரபு அமீரக மன்னர் ஷேக் கலிபா பின் ‌ஷயத் அல் நயான் துபாயில் வாழும் கேரள தொழில் அதிபர் எம்.ஏ.யூசுப் அலி மூலம் முதல்-மந்திரி பினராய் விஜயனிடம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.



    அதை தொழில் அதிபர் யூசுப் அலி மறுத்துள்ளார். அவரது தகவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘இந்த விவகாரத்தில் அவரது பெயர் தேவையில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக இந்த செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை (வழக்கு) தொடரப்படும். யூசுப் அலியின் ‘லூலூ’ குருப் ஏற்கனவே முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Kerala #KeralaFloods #KeralaFloodRelief #UAE
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் வெற்றியை கேரள வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு அர்ப்பணித்த இந்திய அணி கேப்டனுக்கு பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார். #ViratKohli
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் வெற்றியை கேரள வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு அர்ப்பணித்த இந்திய அணி கேப்டனுக்கு பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார். #ViratKohli

    இங்கிலாந்தில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இந்திய அணி கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார்.

    இதற்காக விராட் கோலிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். ‘‘கேரள மாநில மக்களுக்கு கிரிக்கெட் வெற்றியை சமர்ப்பித்ததற்கு நன்றி. இந்திய அணியின் வெற்றிக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’’  என்று அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



    நேற்றைய டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதும், ‘‘இந்த டெஸ்ட் வெற்றியை கேரளா வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு அர்ப்பணிக்கிறோம். அவர்களுக்கு தற்போது கடினமான நேரம்’’ என்று கூறினார்.

    இந்திய அணி வீரர்கள் 3-வது டெஸ்டில் கிடைக்கும் சம்பளத்தை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்க இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
    கேரளாவில் மழை பாதிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக வரும் 30-ம் தேதி சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடத்துவது தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. #KeralaFloods #KeralaSpecialAssembly
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வந்த நிலையில், கடந்த 8-ந் தேதி முதல் 18-ந்தேதி வரை பேய் மழை பெய்தது. 11 நாட்கள் இடைவிடாது பெய்த மழையால் கேரளாவின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கியது. இயற்கை சீற்றத்தில் சிக்கிய மக்களை மீட்க ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு குழுவும், சமூக ஆர்வலர்களும் களம் இறங்கினர்.

    இவர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முகாம்களில் சேர்த்து வருகிறார்கள். இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    கேரளாவில் பேய் மழையும், நிலச்சரிவும் ஏற்பட்டு ஏராளமான பயிர் நிலங்கள் சேதம் ஆனது. சாலைகள், பாலங்கள், ரெயில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மாநில அரசு எடுத்த முதற்கட்ட கணக்கீட்டில் மழை சேதம் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

    மழையால் இதுவரை 368 பேர் பலியாகி விட்டதாகவும் மாநில அரசு தெரிவித்தது. இன்னும் மண்ணுக்குள் புதைந்தவர்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கண்டு பிடிக்கப்படாதவர்கள் எண்ணிக்கையையும் சேர்த்தால் இறந்தோர் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

    எனவே கேரளாவை தேசிய பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கேரள அரசு கோரியது. இதை ஏற்ற மத்திய அரசு தற்போது கேரளாவை அதிதீவிர இயற்கை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்துள்ளது.

    இதன் மூலம் கேரளாவுக்கு கூடுதல் நிவாரண உதவிகள் கிடைக்கும். தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்தும் பணம் ஒதுக்கீடு செய்யப்படும். தேசிய சாலைகள், ரெயில் பாதைகள், பாலங்கள் செப்பனிடும் பணியிலும் மத்திய அரசு உதவி செய்யும்.

    மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இன்று முதல்-மந்திரி பினராய் விஜயன் தலைமையில் மந்திரி சபை அவசர கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மழை நிவாரணப் பணிகள் மற்றும் மத்திய அரசிடம் கூடுதலாக நிவாரண நிதி கேட்பது, சுகாதார திட்டங்களை நிறைவேற்ற உதவி கோருவது, சாலைகளை செப்பனிடுவது குறித்த திட்டங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.



    இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், கேரளாவில் மழை பாதிப்புகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக ஆகஸ்ட் 30-ம் தேதி சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்த அமைச்சரவையில் முடிவு செய்திருப்பதாக கூறினார். மேலும், சிறப்பு சட்டசபை கூட்டம் தொடர்பாக ஆளுநருக்கு பரிந்துரை செய்திருப்பதாகவும் கூறினார்.

    ஆளுநர் ஒப்புதல் அளித்ததும் சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள், மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே, இன்று மாலை திருவனந்தபுரத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதில் மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அனைத்து கட்சி தலைவர்களும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கேரளாவில் நிறைவேற்றப்பட வேண்டிய உடனடி நிவாரண பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. #KeralaFloods #KeralaSpecialAssembly
    ×